ETV Bharat / state

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு

author img

By

Published : May 29, 2022, 7:18 AM IST

ஜோலார்பேட்டையில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை
ரயில் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில்வே நிலைய இரண்டாவது பிளாட்பாரத்தில் நேற்று (மே. 29) இரவு ரயில்வே காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அதில், தண்டவாளத்திற்கு நடுவில் ஒரு வயதுள்ள ஆண் குழந்தையின் சடலம் இருந்தது.

குழந்தையின் சடலத்தை மீட்டு ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த பெற்றோரின் குழந்தையாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் சிசு; மயங்கி கிடந்த தாயும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.