திருப்பத்தூர் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள நீதிமன்றம் எதிரே மின்கம்பம் உள்ளது. இதில் இருந்த தெருவிளக்கு பழுதடைந்தது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் இன்று (டிச. 01) காலை 8 மணி அளவில் பெரிய குனிச்சி பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர் குணசேகரன் வந்து, மின்கம்பத்தில் ஏறி தெருவிளக்கை மாற்ற முயன்றார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மின்வயரில் சிக்கி துண்டாகிய ஊழியரின் தலை - அச்சுறுத்தும் வீடியோ