ETV Bharat / state

ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அழிப்பு

author img

By

Published : Jul 21, 2022, 7:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

ஜேசிபி இயந்திரம் மூலம் நசுக்கி அழிக்கப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்
ஜேசிபி இயந்திரம் மூலம் நசுக்கி அழிக்கப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்

திருப்பத்தூர்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநிலம் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளத்தனமாக விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் 7,400 மதுபாட்டில்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அழிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அயன் பட பாணியில் போதை பொருள் கடத்திய நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.