ETV Bharat / state

தூத்துக்குடியில் காதல் மனைவியை கழுத்து நெரித்துக்கொலை செய்த கணவர் கைது!

author img

By

Published : Jul 2, 2023, 1:19 PM IST

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவர் கைதுat
காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவர் கைது

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பண்ணையைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியம். இவரது மகன் பூல்பாண்டியன் (வயது 28). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முத்துராணி (வயது 25) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வாரம், பூல்பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் அதே பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் வைத்து முடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்து உள்ளது.

இதற்காக கணவன், மனைவி தரப்பு உறவினர்களையும் அழைத்து, தடபுடலாக நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அதனை அடுத்து பந்தல் முதல் உணவு சமைத்தவர்கள் என அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று பூல்பாண்டி, தன் மனைவி முத்துராணியின் நகைகளைக்கேட்டு உள்ளார். அதற்கு முத்துராணி நகைகளைத் தர மறுத்து உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இந்த நகை பிரச்னை நீடித்து வந்து உள்ளது.

இதற்கிடையில் இன்று காலை வடக்கு தோழப்பண்ணை பகுதியில் இலவச பட்டா கொடுக்கப்பட்டு உள்ள இடத்தில் குடிசைப் போடுவதற்காக இருவரும் சென்று உள்ளனர். அங்கு சென்றும் பூல்பாண்டி மனைவியிடம் நகைகளைக் கேட்டு உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி, தான் வைத்திருந்த துண்டால் மனைவி முத்துராணியின் கழுத்தில் போட்டு, இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி கொலை.. சிறையில் இருந்து வெளி வந்த உடன் அரங்கேறிய சம்பவம்

இதற்கிடையில் அங்கு நின்றவர்கள் பூல்பாண்டியன் ஓடுவதைப் பார்த்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த குடிசைக்குச் சென்று பார்த்து உள்ளனர். அங்கு பூல்பாண்டியனின் மனைவி இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், உடனே ஸ்ரீவைகுண்டம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் இறந்த முத்துராணியின் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய பூல்பாண்டியனை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் மனைவியைக் கொலை செய்து விட்டு, கணவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.