ETV Bharat / state

ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி

author img

By

Published : Nov 6, 2022, 10:16 AM IST

ஆவின் கொள்முதல் விலை குறித்து அரசு வெள்ளையறிக்கை விட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்வு
ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்வு

தூத்துக்குடி: கோவில்பட்டி தனியார் திருமணமண்டபத்தில் வைத்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் செயல் வீரர் கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம், எதிரே திமுக அரசைக்கண்டித்து மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்யப்படும் எனக்கூறியது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. திராவிட மாடல் எனக்கூறும் திமுக சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் செய்ய வேண்டும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு மின் கட்டணத்தை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உயர்த்தியுள்ளது என சொத்தைக்காரணத்தை காட்டுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் திமுக, அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்துவிட்டார்களா?' என்றார்.

மொழி குறித்து ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு, 'நான் அதை ஆழமாகப் படித்து விட்டுத்தான் பதில் கூற முடியும்' எனக் கூறினார்.

மேலும் அவர், 'ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் கொள்முதல் விலை குறித்து அரசு வெள்ளையறிக்கைவிட வேண்டும். சென்னையில் மழை வந்தால் பாதிப்பு வரும் என தெரிந்தே ஏன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

திமுக அரசு நாளுக்கு நாள் தோற்றுக்கொண்டு இருக்கிறது. கனிமவள கொள்ளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் வரை ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை அருகே பார் நடத்துகின்றனர். திமுக ஆட்சியில் எல்லாமே குளறுபடியாக வாக்குறுதிக்கு எதிராகவே நடக்கிறது.

ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி

பழைய பென்ஷன் திட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை இப்படி எந்த பிரச்னைக்குமே தீர்வு வராமல் இவர்களுக்கு எப்பவாவது ஒரு சாக்குப் போக்கு வேண்டும் என்பதற்காகவே இந்தி எங்கே வருகிறது.

எதில் திணிக்கப்படுகிறது, திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்கினார்கள். இதேபோல் இந்தி திணிப்பு ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டையும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே எடுத்திருக்கிறது கேடயமாக’ எனக்கூறினார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்கள் 87 பேர் ஐஐடியில் படிக்க தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.