ETV Bharat / state

மின்வாரிய குடியிருப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர், ஆயில் திருடிய இருவர் கைது

author img

By

Published : Aug 22, 2022, 10:12 AM IST

உடன்குடி மின்வாரிய குடியிருப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர் , ஆயில் திருடிய 2 பேரை குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மின்வாரிய குடியிருப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர், ஆயில் திருடிய இருவர் கைது
மின்வாரிய குடியிருப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர், ஆயில் திருடிய இருவர் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி உபமின் நிலையத்தில் உடன்குடி நகர பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வினியோகப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்காக 25 கேவி திறனுடைய டிரான்ஸ்பார்மர்கள் உடன்குடி மின் நிலைய பணியாளர் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.

உடன்குடி உதவி மின் பொறியாளர் மகாலிங்கம் கடந்த மே மாதம் 1ஆம்தேதி ஆய்வு செய்தபோது அங்கு அந்த டிரான்ஸ்பார்மர்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, ஜூன் மாதம் 4ஆம் தேதி மீண்டும் ஆய்வுசெய்த போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் காயல் மற்றும் ஆயில்கள் மின்மாற்றிகளில் இருந்து திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடன்குடி உதவி மின் பொறியாளர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மாரி செல்வன் மற்றும் மதன்குமார் (19), ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 240 கிலோ காப்பர் மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மேலும் சிலரை குலசேகரபட்டினம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.