தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. தூத்துக்குடியில் நேற்றிரவு (நவம்பர் 15) முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
மாநகராட்சிப் பகுதியில் இன்று காலை முதல் மழை பெய்துவருகிறது. இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. தண்ணீா் வடியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.
மேலும், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்துவருகின்றனா். தொடர்ந்து மழை நீடித்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது.