தூத்துக்குடியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் கிறிஸ்டோபர், இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (ஜன.23) பேசினர். அப்போது, அவர்கள் கூறுகையில்,"சுற்று சூழலை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் கடந்த 8 ஆண்டுகளாக சுமார் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.
அதேபோல் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் தருவைகுளத்தில் உள்ள குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோளின் படி 3 ஏக்கர் இடத்தை சுத்தம் செய்து மரம் நடவு செய்தோம்.
மரக்கன்று நட திட்டம்
கிட்டத்தட்ட 15 மாதங்களில் மரங்கள் அனைத்துமே 8 அடிக்கு மேல வளர்ந்து நல்ல பசுமையான காடாக காட்சியளிக்கிறது. தற்போது அடுத்த இலக்காக மாநகராட்சி ஆணையாளர் 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார். இந்த இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் வருகிற 24ஆம் தேதி 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம்.
மரக்கன்று நட அழைப்பு
இதற்காக தூத்துக்குடியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள், கல்லூரி, முன்னாள் மாணவர் சங்கங்கள் இணைந்து முயற்சி செய்து வருகிறோம். எனவே பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து நபர் ஒருவருக்கு 4 மரம் நட்டு வைக்க கேட்டுக்கொள்கிறோம். குப்பை கிடங்கை பசுஞ்சோலையாக மாற்றினால் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க சிறந்த நகரமாக தூத்துக்குடியை மாற்ற மரங்களை நட அழைக்கிறோம்" என்றனர்.
இதையும் படிங்க: பசுமை புரட்சி செய்யும் விவசாயி பாஸ்கர் - ஆயுள் தரும் விவசாயிக்கு மக்கள் பாராட்டு