ETV Bharat / state

முகக்கவசம், சமூக இடைவெளியின்றி அரங்கேறிய பட்டமளிப்பு விழா!

author img

By

Published : Apr 18, 2021, 5:35 PM IST

தூத்துக்குடி : அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சி நிறைவு பட்டமளிப்பு விழா முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி அரங்கேறிய பட்டமளிப்பு விழா
தூத்துக்குடியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி அரங்கேறிய பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் இணைந்த மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு பட்டமளிப்பு விழா இன்று (ஏப்.18) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்பட்ட முகக்கவசம், சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை.

தூத்துக்குடியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி அரங்கேறிய பட்டமளிப்பு விழா

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களே அலட்சியமாக செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : திணறும் தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.