ETV Bharat / state

தசரா விழாவிற்கு மாலையிட சென்ற மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு

author img

By

Published : Sep 28, 2019, 4:15 PM IST

தூத்துக்குடி: ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து

தூத்துக்குடி சாந்தி நகரைச் சேர்ந்த மாணவர்கள் மணிசங்கர் (வயது 18), அஜித்குமார் (19). மணிசங்கர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஜித்குமார் ஜக்கம்மாள் புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான மணிசங்கரும், அஜித்குமாரும் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிய முடிவு செய்தனர்.

இதற்காக, இவர்களோடு இன்னும் நான்கு நண்பர்கள் சேர்ந்து மொத்தம் ஆறு நபர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் காமராஜர்புரம் சீனந்தோப்புவிலக்கு பகுதியில் சென்றபோது லாரி ஒன்று இவர்களின் மீது மோதியதில் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த மணிசங்கர், அஜித்குமாரின் உடல்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சக்திவேல் (39) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

கழுத்தில் வெடிமாலை, கையில் மண்ணெண்ணெய் இளைஞர் தற்கொலை மிரட்டல்! -நெய்வேலியில் பரபரப்பு

Intro:மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்திசெல்ல முயற்சி:- ஆறுமுகநேரி அருகே லாரி மோதியதில் 2 மாணவர்கள் பரிதாப பலி - குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்Body:
தூத்துக்குடி


ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தனர். 


தூத்துக்குடி சாந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் மணிசங்கர் (வயது 18). தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துகுமார். இவருடைய மகன் அஜித்குமார் (19), தூத்துக்குடி ஜக்கம்மாள் புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான மணிசங்கரும், அஜித்குமாரும் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிய முடிவு செய்தனர். இதற்காக, நண்பர்கள் 4 பேர் உள்பட மொத்தம் 6 பேராக 3 மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆறுமுகநேரி அடுத்த காமராஜர்புரம் சீனந்தோப்புவிலக்கு பகுதியில் சென்றபோது ஒருவரை ஒருவர் மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிசங்கரும், அஜித் குமாரும் முந்தி செல்ல முயன்றபோது சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி எதிரேவந்த லாரி ஒன்று இவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அதிக ரத்த இழப்பினால் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் இறந்த மணிசங்கர், அஜித்குமாரின் உடல்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவிலுக்கு செல்லும் வழியில் லாரி மோதி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.