ETV Bharat / state

3000 ஹெக்டேர் விளை நிலங்கள் தரிசாக மாறும் அவலம்!

author img

By

Published : Sep 30, 2020, 1:24 AM IST

திருவாரூர்: 3000 ஹெக்டேர் விளைநிலங்கள் தரிசாக மாறும் அவநிலையில் இருப்பதால், நன்னிலம் அருகே கோவிந்தன்கால் வடிகால் வாய்க்காலை பாசன வாய்க்காலாக மாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

river dam
river dam

3000 ஹெக்டேர் விளை நிலங்கள் தரிசாக மாறும் அவலம்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட தேவூர், காளியாகுடி, கூத்தனூர், குமாரமங்கலம், கீரனூர், பண்ணைநல்லூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளைநிலங்கள் வீரசோழன் ஆற்றிலிருந்து பிரியும். இந்த நிலங்கள் கோவிந்தன்கால் வடிகால் வாய்க்கால் மூலமாக பாசன வசதி பெற்றுவருகின்றன.

தற்போதுவரை இந்த வடிகால் வாய்க்காலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீர், வீரசோழன் ஆற்றிலிருந்து உபரிநீராக திறந்துவிடப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கோவிந்தன்கால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும். இந்த உபரிநீரை பயன்படுத்தி தான் விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர்.

மழை நீரை நம்பி சாகுபடி செய்வதால், இந்த வடிகால் வாய்க்காலை பாசன வாய்க்காலாக மாற்றிக் கொடுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு இன்று வரை தூர்வாராமல் வடிகால் வாய்க்காலாகவே இருப்பதால், இதனை நம்பியுள்ள 3000 ஹெக்டேர் விளைநிலங்கள் சரியான பாசன வசதி பெறமுடியாமல் தரிசு நிலங்களாக மாறி வருகிறது.

விளைநிலம் பாதிக்கும் அவலம்

இதனால், மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு கோவிந்தன்கால் வாய்க்காலை பாசன வாய்க்காலாக மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.