ETV Bharat / state

நன்னிலத்தில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

author img

By

Published : Feb 14, 2021, 3:05 PM IST

திருவாரூர்: நன்னிலம் பகுதிகள்  முழுவதுமாக நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால், நெல்மணிகள் வயலிலேயே கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நன்னிலத்தில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!
நன்னிலத்தில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகள் நடந்துவந்த நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் தனியார் அறுவடை இயந்திரங்களை பெற்று விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபடும் நிலையில் தனியார் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் நெல் மணிகள் முழுவதுமாக வயலிலேயே சாய்ந்து கருகி பதறாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

நன்னிலத்தில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறை அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கூடுதலாக தனியார் அறுவடை இயந்திரங்களை பெற்று விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் மோடி - ஓபிஎஸ் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.