ETV Bharat / state

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு!

author img

By

Published : Sep 28, 2020, 2:54 PM IST

மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமத்தில் வசிக்கும் விவசாயி கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விவசாயி உயிரிழப்பு
விவசாயி உயிரிழப்பு

திருவாரூர்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமம் மேல தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி ( 55 ). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு (செப்.27) மன்னார்குடி பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அப்பகுதியில் அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் அறுந்து கிடந்தன. தொடர்ந்து இன்று (செப்.28) அதிகாலையில் கடைத்தெருவிற்கு டீ வாங்க செல்வதற்காக மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சுந்தரமூர்த்தி மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அதை மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் அவர் உடல் முழுவதும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.