ETV Bharat / state

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Feb 8, 2020, 4:20 PM IST

திருவாரூர்: ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்குடியில் ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. தற்போது இக்கோயிலானது சோழர் கால பாணியில் கை தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதியன்று சுவாமிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 12ஆம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. யாகசாலை பூஜைகளை தினகர் சர்மா தலைமையிலான பட்டாச்சாரியார்கள் நடத்திவைத்தனர்.

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

இதனைத் தொடர்ந்து கோயிலின் கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஸ்தாபகர் ரமணி அண்ணா நடத்திவைத்தார். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி திரிசனம் செய்தனர். நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மாசாணியம்மன் கோயில் நள்ளிரவு மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Intro:Body:ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர்.

இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகள் ஆன மிருத சஞ்சீவினி., வி சல்லிய கரணீ., ஸாவர்ண கரணீ., ஸந்தான கரணீ. ஆகிய மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும் என்பது அருள்வாக்கு. இந்த கோயிலில் திருப்பணிகள் அனைத்தையும் ஸ்தாபதர் ரமணி அண்ணா மற்றும் ஸ்ரீ ஜ கத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் சோழர் கால பாணியை பின்பற்றி, திராவிடச் சிற்பக் கலை மரபுகளுடன், சிற்பக்கலை சாஸ்திரமாக கூறப்படும் ஆயாதி அளவுகளுடன் மிகநுட்பமான, சிற்ப வேலையில் கை தேர்ந்த சிற்பிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததையடுத்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 31 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 12ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகளை தினகர் சர்மா தலைமையிலான பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். யாகசாலை பூஜைகள் முடிந்து காலை கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதி விமானங் களை அடைந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி விமானக்கலசத்திற்கு தங்க குடத்தில் எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் கலசாபிஷேகம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ கோ தண்டராமர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சுவாமி சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிக்கு விமான கலசத்திற்கு ஸ்தாபகர் ரமணி அண்ணா கும்பாபிஷே கம் நடத்தி வைத்தார.

அதனையடுத்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா பூஜை, தீபாராதனை மற்றும் பஞ்சபட்ச நைவேத்தியம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக வி ழாவில் திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமௌலி, ஜெயராமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந் து ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு பூஜைகள், ரதோற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வெள்ளி ரதத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி எழுந்தருள திரளான பக்தர்கள் ரதத்தை இழுத்து கோயிலை வலம் வந்தனர்.

தொடர்ந்து ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3,300 கிலோ எடையுள்ள 5வகை மலர்களால் புஷ்ப விருஷ்டி செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு நன்னிலம் டிஎஸ்பி சுகுமாறன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் கோயில் கோபுரம் மற்றும் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.