காஞ்சிபுரம் பிள்ளையார்ப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளத்தி முருகன், கிருபாவதி தம்பதியினர். இவர்களின் மகன் சதீஷ்குமார் (28) கடந்த ஒரு வருடமாக இவர்களை பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில தன் பெற்றோர்களை ஆசையுடன் சந்திப்பதற்காக இன்று இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இவரை செய்யார் நகரில் உள்ள சௌந்தரி திரையரங்கம் எதிரில் இனோவா காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.
பின்னர் உயிருக்கு பயந்து ஓடி அந்த வழியே வந்த பேருந்தில் ஏறிய சதீஷ்குமாரை அவர்கள் பேருந்துக்குள்ளேயே வைத்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:
பாத்திரக்கடை உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை -போலீசார் விசாரணை