திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் பிரகார கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் 300 கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் தங்கம் 243 கிராம், வெள்ளி 706 கிராம், தவிர ஒரு கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரூபாய் எனப் பக்தர்களின் காணிக்கை இருந்தது.
மேலும், சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செலவில் புதிதாக சில்லறைக் காசு எண்ணும் இயந்திரம் பக்தர்களால் அண்ணாமலையார் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த சில்லறை எண்ணும் இயந்திரத்தில் சில்லறைகள் எண்ணப்பட்டன. காணிக்கையில் வெளிநாட்டுப் பணமும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: