ETV Bharat / state

நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

author img

By

Published : Aug 5, 2022, 12:28 PM IST

செய்யாறில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை: செய்யாறில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் இன்று (ஆக. 4) நெல் கொள்முதல் செய்யாததால், அதனை கண்டித்து வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே ஆற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அதன் துறை சார்பில் புதியதாக 10 கடைகள் கட்டப்பட்டுள்ளது அந்த கடைகளை வாடகைக்கு ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கடைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறி பொது ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என தெரிகிறது.

நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் விலை நிர்ணயம் செய்யாமலும், கொள்முதல் செய்யாமலும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்யாறு டிஎஸ்பி செந்தில் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

வேளாண் பொருட்களை இன்றே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மழையில் வீணாகும் நெல்மணிகள்; உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.