ETV Bharat / state

'வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்க' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Jan 21, 2020, 1:45 PM IST

திருவண்ணாமலை: கருங்காலி குப்பம் கிராமத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

people protest
people protest

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தில் வசித்துவரும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், ”கருங்காலி குப்பம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் சாமி ஊர்வலம் கடந்த 17ஆம் தேதி இரவு நடைபெற்றது.

திருவிழாவின்போது ஏழுமலை என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டார். அப்போது, நாங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றை அவர்கள் தீ வைத்து எரித்ததோடு மட்டுமில்லாமல், வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். நாங்கள் தெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் சாமி சிலையை உடைத்து, மக்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.

மனு அளிக்க வந்த மக்கள்

இதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், வன்முறை ஏற்படுத்திய ஏழுமலை மீது புகாரளித்தும் காவல் துறையினர் மெத்தனமாக உள்ளனர். நாங்கள் அச்சத்துடனும் ஒருவிதமான பதற்றமான சூழலிலும் வாழ்ந்துவருகிறோம். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

Intro:ஜாதி பெயரை வைத்து கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் வகையில் நடக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு


Body:ஜாதி பெயரை வைத்து கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் வகையில் நடக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்வந்து போராட்டம் நடத்தினர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர் அதில் கருங்காலி குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா சாமி ஊர்வலம் கடந்த 17ம் தேதி இரவு நடந்தது

இந்த திருவிழாவின்போது ஏற்கனவே திட்டமிட்டு ஏழுமலை என்பவர் அவரது ஆதரவாளர்கள் உடன் வந்து கலவரத்தை தூண்டிவிட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் ஒரு கார் பள்ளி மாணவர்கள் செல்லும் பல மிதிவண்டிகள் பொதுமக்களின் பல வீடுகள் வைக்கோல் போருக்கு தீ வைத்து எரித்து ஊர் பொதுமக்கள் வணங்கும் கூத்தாண்டவர் சாமி சிலையை உடைத்து கிராம மக்கள் பலருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தி சென்றனர்.

10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் சேதத்தை ஏற்படுத்திய ஏழுமலை என்பவர் மீது புகார் அளித்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் கருங்காலி குப்பம் மக்கள் அச்சத்துடன் ஒருவிதமான பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது

எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அமைதியான முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் கிராம மக்கள் சார்பாக மனு ஒன்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் அளித்தனர்.


Conclusion:ஜாதி பெயரை வைத்து கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் வகையில் நடக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.