ETV Bharat / state

குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்.. அரோகரா கோஷமிட்ட பக்தர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 5:08 PM IST

Updated : Nov 28, 2023, 5:19 PM IST

Tiruvannamalai Girivalam: கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் வகையில் குடும்பத்துடன் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார்.

குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்
குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்

குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக உள்ள அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது. 26ஆம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை ஐய்யங்குள தெருவில் அமைந்துள்ள ஐய்யங்குளத்தில் நேற்று இரவு சந்திர சேகரர் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருவார். தை மாதம் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் அன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுடன் ஊடல் கொண்டு பிறகு மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளிப்பார். இதனால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோயிலுக்கு சென்றுவிடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.

இதனால் ஊடல் கொண்ட அம்மனை சமாதானம் செய்யும் விதமாக கார்த்திகை தீபத்தன்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பார். தீபம் முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின் போது, இரண்டாம் நாள் காலை கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் தன் குடும்பத்துடன் கிரிவலம் சுற்றி வருவார்.

இன்று காலையில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார். கிரிவலத்தின் போது வழிநெடுக பக்தர்கள் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்து அரோகரா கோஷமிட்டு அண்ணாமலையாருக்கு வேட்டி, உண்ணாமுலை அம்மனுக்கு புடவைகள் அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஏராளமான வெளிநாட்டினரும் கிரிவலப் பாதையில் வந்த அண்ணாமலையாரை பூஜித்து தரிசனம் செய்தனர். இதனை தொடந்து இன்று இரவு திருவண்ணாமலையில் உள்ள ஐய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் இரண்டாம் நாள் தீபம்: ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம்!

Last Updated : Nov 28, 2023, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.