ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - 7ஆம் நாளில் விநாயகர் ஊர்வலம்!

author img

By

Published : Dec 3, 2022, 1:24 PM IST

திருவண்ணாமலை அண்ணாலையார் கோயில் திருக்கார்த்திகை தீப மகாரத தேரோட்ட திருவிழாவின் ஏழாம் நாளான இன்று ஏராளாமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் 'திருக்கார்த்திகை தீப மகாரத தேரோட்ட திருவிழா'வின் ஒரு பகுதியாக, இன்று (டிச.3) விநாயகர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. 'நினைத்தாலே முக்தி தரும்' பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தி மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மகாரத தேரினில் எழுந்தருளினர். பின்னர் விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.

அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - 7ஆம் நாளில் விநாயகர் ஊர்வலம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக நடைபெறாத மகாரத தேரோட்டம் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று மாடவீதிகளில் வலம் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத்தொடந்து, முருகர் தேரோட்டமும் அண்ணாமலையாரின் மகாரத தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தையொட்டி, 5000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் தீபத்திருவிழா - 6ஆம் நாளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.