ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.79 லட்சம்

author img

By

Published : Jul 29, 2021, 9:56 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக ரூ.79 லட்சம், 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

Annamalaiyar temple bill donation about Rs 79 lakh
Annamalaiyar temple bill donation about Rs 79 lakh

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி நாளன்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருகின்றனர்.

அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள் கோயில் வளாகம், கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்த பின்னர் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி ஆகஸ்ட் 8ஆம் தேதி பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ராஜ கோபுரம் முன்பு சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.

உண்டியல் பணத்தை எண்ணும் பணி
உண்டியல் பணத்தை எண்ணும் பணி

பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணும் பணி இன்று (ஜூலை.29) நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி, 79 லட்சத்து 74 ஆயிரத்து 868 ரூபாய் பணமும் கிடைத்தது.

இதையும் படிங்க: திருக்கோயில் இடங்களை மீட்க தயார் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.