ETV Bharat / state

கார்திகை மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ சோலீஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை..!

author img

By

Published : Nov 18, 2019, 6:28 AM IST

திருவள்ளூர்: கார்திகை மாதத்தை முன்னிட்டு பேரம்பாக்கம் ஸ்ரீ சோலீஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை செய்து பெண்கள் ஐயப்பனை வழிபட்டனர்.

Women's Lighting Pooja

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் ஸ்ரீ சோலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 24ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட 108 குத்துவிளக்குகளுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் கூற, பெண் பக்தர்கள் அதைனை திருப்பி கூறியும், மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் நல்ல முறையில் படிக்கவும், உலக அமைதி பெறவும் வேண்டி பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீ சோலீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை செய்த பெண்கள்

இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Intro:திருவள்ளூர் அருகே 24 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து ஐயப்பனை வழிபட்டனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் ஸ்ரீ சோலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 24-ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 108 குத்துவிளக்கு சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் கூறி பெண்கள் அதை திருப்பி கூறி 108 குத்துவிளக்கு பூஜைகள் செய்து மழை வளம் பெருகவும்,விவசாயம் செழிக்கவும்,வீட்டில் அனைவரும் நோய் நொடி இன்றி மகிழ்ச்சியாக வாழும்,குழந்தைகள் நல்ல முறையில் படிக்கவும்,உலக அமைதி பெறவும் வேண்டி பூஜைகள் செய்தனர். இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பனை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரம்பாக்கம் கிராமத்தினரை செய்திருந்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.