ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயிலில் படிகள் அமைக்கும் பணி தொடக்கம்

author img

By

Published : Apr 1, 2022, 11:17 AM IST

திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரத்திலிருந்து தேர் வீதி வரை ரூ.92 லட்சம் செலவில் படிகள் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா

திருவள்ளூர்: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஒன்பது நிலை கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதி இணைக்கும் 56 படிகள் 92 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் சீர்செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெள்ளித்தேர் 18.30 லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யும் பணியினையும் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று வெள்ளோட்டம் நடைபெறும்.

அடிக்கல் நாட்டு விழா

இத்திருக்கோயிலில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும். அதன்பிறகு அரசு பணியாளர்களுக்கு புத்தாக பயிற்சி கட்டடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை செய்வதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைதுறையின் கீழ் பணியாற்றும் கோயில் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய கமிஷன் முதலமைச்சர் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அறங்காவலர் குழு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சாலை விதிகளை மீறிய உணவு டெலிவரி ஊழியர்கள் - ஒரேநாளில் 978 வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.