ETV Bharat / state

ஊரடங்கில் உணவின்றி தவித்த மக்கள் : ஒன்று திரண்டு உதவி இளைஞர்கள்!

author img

By

Published : May 27, 2021, 10:28 AM IST

திருவள்ளூர் : பெரும்பாக்கம் பகுதியில், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த ஏழைகளுக்கு உதவும் வகையில் இளைஞர்கள் ஒன்று திரண்டு உணவு வழங்கினர்.

perumbakkam youth provide food to homeless
perumbakkam youth provide food to homeless

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தினக்கூலிகள், சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்ற ஏழைகள் பசியால் வாடும் சூழ்நிலை நிலவி வருகிறது.

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒன்று திரண்டு உதவும் இளைஞர்கள்

இதனை அறிந்த திருவள்ளூர் பெரும்பாக்கம் இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு தங்களின் சேமிப்பில், திருவள்ளூர் முன்னாள் நகரமன்ற தலைவர் பொன்பாண்டியன் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு உணவளிக்க முடிவு செய்தனர். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மூலம் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று இளைஞர்கள் உணவளித்தனர்.

இதையும் படிங்க: குமரியில் கனமழை: விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.