ETV Bharat / state

மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை!

author img

By

Published : Feb 10, 2021, 8:50 PM IST

திருவள்ளூர்: திருத்தணியில் மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை, தந்தையே கத்தியால் குத்தியும், தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

the-father-killed-his-son-was-addicted-to-alcohol-and-cannabis
the-father-killed-his-son-was-addicted-to-alcohol-and-cannabis

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர் திருத்தணி காமராஜர் மார்க்கெட் பகுதியிில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கோகுல்(22). இவர் மது, கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துச் சென்று, குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்ததால் தந்தைக்கும் மகனுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை கோகுல் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோகுல் இன்று மீண்டும் கடைக்கு வந்ததால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை பழனி, மகனை மார்க்கெட் பின்புறமாக அழைத்துச் சென்று கத்தியால் குத்தியதுடன், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

கொலை செய்த கையோடு அவர் திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்றும் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்து பிரச்னை: காதல் தம்பதி விஷமருந்தி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.