திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியிருந்தது.
தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது.
திரையரங்குகளைத் திறக்க அனுமதி
அந்த வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திறக்க அரசு அனுமதித்தது. இதனையடுத்து திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
பழைய படங்கள் திரையீடு
ஆனால், புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்குகள் கடந்த மூன்று நாட்களாக திறக்கப்படாமல் இருந்தன. புதிய தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் திரையிடப்பட்டு வரும் நிலையில், பழைய தமிழ்ப் படங்கள், தமிழில் டப் செய்யப்பட்ட மாற்று மொழிப் படங்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்து இன்று (ஆகஸ்ட்.26) திரையரங்குகளைத் திறந்தனர்.
இதையும் படிங்க: நீங்க தடுப்பூசி போட்டிருக்கீங்களா... பிவிஆர் அறிவித்த அதிரடி ஆஃபர்!