ETV Bharat / state

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு

author img

By

Published : Nov 27, 2020, 4:16 PM IST

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

இன்று மாலை பூண்டி ஏரியில் நீர் திறப்பு
இன்று மாலை பூண்டி ஏரியில் நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் 18,000 கனஅடி நீர் உள்ளது. தொடர்ந்து 2,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் இன்று (நவ.27) மாலை 5 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும், உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்கு கீழ் வைக்க பொதுப்பணித் துறை முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.