ETV Bharat / state

பழவேற்காடு: மீன் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் - பெண்கள் சாலை மறியல்

author img

By

Published : Dec 20, 2022, 5:10 PM IST

பழவேற்காடு அருகே ஒரே கிராமத்தில் இரு தரப்பினரிடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழவேற்காடு: மீன் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் - பெண்கள் சாலை மறியல்
பழவேற்காடு: மீன் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் - பெண்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த ஓராண்டாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் இரு தரப்பு மீனவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதில் இரண்டு வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த நிலையில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இரு தரப்பிலும் 6 மீனவர்கள் காயம் அடைந்த நிலையில், காவல் துறையினர் அவர்களை மீட்டு பழவேற்காடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருப்பாலைவனம் காவல் துறையினர் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் இரு தரப்பிலும் முக்கியமான 44 பேர் உள்பட பலர் மீது கொலை முயற்சி உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ள சூழலில், பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 147 (3) படி மீன் பிடிக்கத் தடை விதித்து, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒரு தரப்பு மீனவ பெண்கள் பழவேற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆண்டிக்குப்பம் கிராமத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் பிரச்னை - 12 மீனவ கிராம மக்கள் முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.