ETV Bharat / state

கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு

author img

By

Published : Aug 1, 2021, 8:20 PM IST

திருவள்ளூரில் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு
பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு

திருவள்ளூர்: சின்ன கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவருக்குச் சொந்தமான கிணற்றில் பச்சிளம் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மிதந்துள்ளது.

இதனைக் கண்ட ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு என்பவரது தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு

பின்னர், வட்டாட்சியர் ஜெயராணி முன்னிலையில் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அது பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை என்பதும், தொப்புள் கொடி கூட அறுக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

காவல் துறை விசாரணை

இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தையின் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் வீசி செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.