ETV Bharat / state

மனைவியின் கண்முன்னே தொழிலாளியின் உயிர் பிரிந்த சோகம்!

author img

By

Published : Feb 12, 2020, 2:48 PM IST

திருவள்ளூர்: இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதியதில், மனைவியின் கண்முன்னே கட்டடத் தொழிலாளியின் உயிர் பிரிந்தது.

A person died by accident at tiruthani
A person died by accident at tiruthani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கோபி. இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் புஜ்ஜிரெட்டிபள்ளி நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தெக்கலூர் என்ற இடத்திலுள்ள வளைவில் திரும்பும்போது வாகனம் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொழிலாளி உயிரிழப்பு

தகவலறிந்து வந்த திருத்தணி காவல் துறையினர் கோபியின் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேகத்தடை இல்லாததாலேயே இதுபோன்ற விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு, உயிரிழப்புச் சம்பவம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அறந்தாங்கி அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.