ETV Bharat / state

பணம் பறித்துக்கொண்டு கைவிட்ட உறவினர் - பார்வையற்ற மூதாட்டியிக்கு ஆதரவளித்த ஆணையர்!

author img

By

Published : Oct 28, 2022, 9:26 PM IST

நெல்லை கண் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் ஆதரவில்லாமல் தவித்து வந்த பார்வைத்திறன் குறைபாடுடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய நெல்லை மாநகர ஆணையரின் செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஆதரவில்லாமல் சாலையில் தவித்த கண் பார்வையற்ற மூதாட்டியிடம் அன்பை வெளிப்படுத்திய- கலெக்டர்
ஆதரவில்லாமல் சாலையில் தவித்த கண் பார்வையற்ற மூதாட்டியிடம் அன்பை வெளிப்படுத்திய- கலெக்டர்

நெல்லை: தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச்சேர்ந்தவர் முத்தம்மாள். 72 வயதான இவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. கண் குறைபாட்டை சரிசெய்ய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மூதாட்டியின் உறவினர்கள் அவரிடம் இருந்து சுமார் ரூ.60,000 பணத்தை பெற்றுக்கொண்டு நெல்லையில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். கண் தெரியாத நிலையில் ஆதரவில்லாமல் மூதாட்டி முத்தம்மாள், என்ன செய்வதறியாமல் கூச்சலிட்டுள்ளார்.

இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளனர். இதையடுத்து ஆட்சியர், மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு நடந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மூதாட்டி தான் உறவினர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் இழந்ததைக்கூறி வேதனை அடைந்துள்ளார்.

உடனே காப்பக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மூதாட்டியை அழைத்துச் சென்றனர். அப்போது மூதாட்டியின் இரு கைகளையும் தழுவிக்கொண்ட ஆணையர், 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். கூட இருந்து உங்களை கவனித்துக்கொள்கிறோம். உங்கள் பணத்தை மீட்டுத் தரவும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று மனதார ஆறுதல் கூறினார்.

பணம் பறித்துக்கொண்டு கைவிட்ட உறவினர் - பார்வையற்ற மூதாட்டியிக்கு ஆதரவளித்த ஆணையர்!

இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூதாட்டிக்கு உரிய பராமரிப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்ததுடன், மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகள் உதவியுடன் புளியங்குடி காவல் நிலையத்திலும் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தார்.

சாலையில் ஆதரவில்லாமல் தவித்து வந்த பார்வைத்திறன் குறைபாடுடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய, ஐஏஎஸ் அலுவலரின் இச்செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும் மாநகராட்சி ஆணையாளர் தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர வைத்து மூதாட்டியைக் கனிவுடன் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க:சென்னையில் காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.