ETV Bharat / state

நெல்லையில் வெள்ளநீரில் மிதந்து வந்த ஆண் சடலம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 10:06 AM IST

Updated : Dec 19, 2023, 10:13 AM IST

Tirunelveli bus stand: திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வெள்ளநீரில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நெல்லை பேருந்து நிலையம்

நெல்லை: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது நெல்லை, தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி பேருந்து நிலைய சந்திப்பு பகுதியில் வெள்ளநீரில் ஆண் சடலம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி, உயிரிழந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிரம்பிய வைகை அணை; கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

Last Updated : Dec 19, 2023, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.