ETV Bharat / state

நெருங்கும் தேர்தல்: வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் திருநெல்வேலி வருகை

author img

By

Published : Dec 19, 2020, 5:02 PM IST

திருநெல்வேலி: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மகாராஷ்டிராவிலிருந்து திருநெல்வேலிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

election commission
election commission

தமிழ்நாட்டில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திருநெல்வேலி ராமையன்பட்டிக்கு அம்மாவட்டத்திற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது.

இதனை ஆய்வு செய்த ஆட்சியர் விஷ்ணு, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், குடோனில் இயந்திரங்கள் வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருநெல்வேலியில் ஆயிரத்து 475 வாக்குச்சாவடிகள்

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 6 ஆயிரத்து 220 வாக்குப் பதிவு இயந்திரங்கள் விவிபேட் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் ஆயிரத்து 475 வாக்குச்சாவடிகளுக்கு 2ஆயிரத்து 950 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஆயிரத்து 475 கண்ட்ரோல் யூனிட்களும் ஆயிரத்து 475 விவிபேட் தேவை உள்ளது.

வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் திருநெல்வேலி வருகை

ஆனால், நம்மிடம் கூடுதலாக 20 விழுக்காடு இயந்திரங்கள் உள்ளன. இதுதொடர்பாக பொறியாளர்கள் மேலும் இதுதொடர்பாக பொறியாளர்கள் வந்து சோதனை செய்வார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ 2,500: முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.