ETV Bharat / state

கார் மீது மோதிய ஆம்புலன்ஸ் - இரண்டு பெண்கள் படுகாயம்!

author img

By

Published : Jul 8, 2020, 11:41 AM IST

திருநெல்வேலி : புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

விபத்தில் இருவர் காயம்
விபத்தில் இருவர் காயம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.