ETV Bharat / state

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 31, 2020, 8:35 PM IST

தேனி: கோடாங்கிப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two-wheeler-collides-head-on-two-killed
two-wheeler-collides-head-on-two-killed

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (35). இவர் தனியார் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணி செய்துவந்துள்ளார். இந்நிலையில் இவரது நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கோடங்கிபட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வாகனத்தின் மீது எதிர்பாரத விதமாக தாமோதரன் மோதியுள்ளார். இதில் வாகனத்தை ஓட்டி வந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானார், அவருடன் வந்த சரவணனுக்கு கால் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் எதிரே வந்த ராஜேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதில் தாமோதரனின் நண்பர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த தாமோதரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பஞ்சாப்பில் கபடி வீரர் சுட்டுக்கொலை - ஐந்து காவலர்கள் உள்பட ஆறு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.