ETV Bharat / state

முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

author img

By

Published : Oct 16, 2022, 10:58 PM IST

சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வராகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை
முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை

தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் 117 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 4 அடி உயர்ந்து இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 125.62 படியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர துவங்கிய நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது அணைக்கு வரும் 107 கனஅடி நீரும் அப்படியே வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை

இதனைத் தொடர்ந்து வராகநதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பெரியகுளம் பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திட்டங்களை விவசாயிகளிடம் திணிக்க வேண்டாம்... அதிகாரிகளை கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.