ETV Bharat / state

சுருளி அருவியில் குளிக்கத் தடை!

author img

By

Published : Oct 30, 2019, 6:21 PM IST

தேனி: சுருளி அருவியில் குளிப்பதற்கு 10ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

river

தேனி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுருளி அருவியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவி

இந்நிலையில், 10ஆவது நாளாக தொடரும் தடையால் அருவிக்கு ஆசையோடு குளிக்கவரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர். மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பருவமழை பெய்துவருகிறது.

இதையும் படிங்க:ரம்மியமாகக் காட்சியளிக்கும் கும்பக்கரை அருவி!

Intro: தொடர் மழையால் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயனிகளுக்கு குளிக்க 10வது நாளாக தடை - வனத்துறை அறிவிப்பு.
Body: தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. தேனி மாவட்ட சுற்றுலாத்தளங்களில் முக்கியமான சுற்றுலாத்தளம் ஆகும். இங்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
         இந்நிலையில் நேற்று முதல் இரவு முழுவதும் மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையால், சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
         
Conclusion: தொடர்ந்து 10வது நாளாக நீடிக்கு தடையால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.