ETV Bharat / state

மக்களவை உறுப்பினரானார் ஓபிஎஸ் மகன்? கோயில் கல்வெட்டால் சர்ச்சை

author img

By

Published : May 17, 2019, 9:27 AM IST

Updated : May 17, 2019, 10:43 AM IST

தேனி: தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே, எம் பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று கோயில் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

மக்களவை உறுப்பினரானார் ஓபிஎஸ் மகன்? கோயில் கல்வெட்டால் சர்ச்சை

தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி கோயிலில் நேற்று ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அந்த கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அவரது இளைய மகன் ஜெய பிரதீப்குமார் பெயர் இடம்பெற்றுள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்று கோயில் நிர்வாகத்தால் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என்று கோயில் நிர்வாகம் எப்படி கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.             16.05.2019.

                தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே .பி.எஸ்-ன் மகனை  எம்.பி.! என அறிவித்த கோவில் நிர்வாகம்.! மறுவாக்குப்பதிவு, தேவைக்கதிகமான வாக்குப்பெட்டிகளின் வரவு என அடுத்தடுத்து தேனி தொகுதியில் சர்ச்சை.!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் அமைந்துள்ளது சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில். இக்கோவில் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி கோவிலில் இன்று ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  என்ற கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று குறிப்பிட்டு; .பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வர் மற்றும் அவரது இளைய மகன் ஜெயபிரதீப்குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, தேனி பாராளுமன்ற உறுப்பினர் .பி.ரவீந்திரநாத்குமார் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என்று கோவில் நிர்வாகம் எப்படி கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இது நடந்திருக்காது. கல்வெட்டில் தேதி 16052019 என்று இன்றைய தேதி குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாகவே துணைமுதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமாரை பாராளுமன்ற உறுப்பினர் என அறிவிக்கும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டிருப்பதன் பின்னால், அரசு அதிகாரிகள் இருப்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

தேனி தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு, தேவைக்கதிகமாக கூடுதலாக வந்திறங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அடுத்தடுத்து சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில், தற்போது கோவில் நி;ர்வாகம் ரவீந்திரநாத்குமாரை தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே எம்.பி. என பெயர் பொறித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_04_16_OPS SON INSCRIPTION ISSUE_VIS_7204333

2)      TN_TNI_04a_16_OPS SON INSCRIPTION ISSUE_SCRIPT_7204333

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

Last Updated : May 17, 2019, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.