ETV Bharat / state

தேனி மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!

author img

By

Published : Jan 13, 2020, 8:47 PM IST

தேனி: தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தராததால் மூன்று ஒன்றியங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Breaking News

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள எட்டு ஒன்றியங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக -7, பாஜக -1, திமுக -2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதிவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றாவது வார்டு உறுப்பினர் போடி பிரீத்தா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களை அதிமுகவும், கம்பத்தில் பாஜகவும், தேனி ஒன்றியத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது. பெரியகுளம், சின்னமனூர் , கடமலை - மயிலை ஆகிய மூன்று ஒன்றியங்களில் நடைபெறவிருந்த மறைமுகத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

16 உறுப்பினர்களைக் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுக -6, தேமுதிக -1, திமுக - 8, மற்றும் அமமுக -1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக உறுப்பினர் செல்வம் என்பவர் அதிமுகவில் இணைந்ததால் அதிமுகவின் பலம் அதிகரித்து, திமுக பலம் சரிந்தது. இந்நிலையில் நடைபெறவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தராததால் பெரியகுளம் ஒன்றியத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

இதேபோல் 10 உறுப்பினர்களை கொண்ட சின்னமனூர் ஒன்றியத்தில் அதிமுக -4, திமுக -6 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தை திமுக கைப்பற்றுவது சுலபமாக அமைந்தது. ஆனால் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமார் என்பவர் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டதால், இரு கட்சிகளும் சமபலம் பெற்றது. இதனையடுத்து, மறைமுகத் தேர்தலில் பங்கேற்க அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 14 உறுப்பினர்களைக் கொண்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் திமுக, அதிமுக சமபலம் பெற்றிருந்தது. மறைமுகத் தேர்தலில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்கள் வராததால் கடமலை - மயிலை ஒன்றியத்திலும் மறைமுகத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தல் நடைபெற்ற 5 ஒன்றியங்களில் அதிமுக -3, பாஜக -1 மற்றும் திமுக -1இடங்களில் வென்றுள்ளது. இவற்றில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிபட்டியில் லோகிராஜன், போடியில் சுதா, உத்தமபாளையத்தில் ஜான்சிராணி ஆகியோர்கள் ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற வேட்பாளர்

கம்பம் ஒன்றியத்தில் ஒரு இடத்தில் வென்ற பாஜகவைச் சேர்ந்த பழனிமணி என்பவர் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக ஆதரவுடன் தலைவர் பதவியை போட்டியின்றி கைப்பற்றினார். திமுக உறுப்பினர் ரேணுகா தேர்தலில் போட்டியிடவில்லை. தேனி ஒன்றியத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சக்கரவர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும் தங்களது வெற்றியை கொண்டாடினர்.

இதையும் படிங்க: மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு!

Intro: தேனி மாவட்டத்தில் 3ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு.! தேர்தல் நடைபெற்ற 5ஒன்றியங்களில் அதிமுக -3, பாஜக -1 மற்றும் திமுக-1 என தலைவர் பதவிகளை கைப்பற்றியது.
தேனி மாவட்ட ஊராட்சியை போட்டியின்றி அதிமுக கைப்பற்றியது.!



Body: தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 8ஒன்றியங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இவற்றில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. மொத்துள்ள 10மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக -7, பாஜக -1, மற்றும் திமுக -2இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் மாவட்ட ஊராட்சியை அதிமுக கைப்பற்றுவதில் சுலபம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பதிவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 1வது வார்டு உறுப்பினர் போடி பிரீத்தா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக பாஜகவை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 3ஒன்றியங்களை அதிமுகவும், கம்பத்தில் பாஜகவும், தேனி ஒன்றியத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது. பெரியகுளம், சின்னமனூர் மற்றும் கடமலை - மயிலை ஆகிய 3ஒன்றியங்களில் இன்று நடைபெறவிருந்த மறைமுகத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
16உறுப்பினர்களை கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுக -6, தேமுதிக -1, திமுக - 8, மற்றும் அமமுக -1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக உறுப்பினர் செல்வம் என்பவர் அதிமுகவில் இணைந்ததால் அதிமுகவின் பலம் அதிகரித்து, திமுக பலம் சரிந்தது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தராததால் பெரியகுளம் ஒன்றியத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் 10உறுப்பினர்களை கொண்ட சின்னமனூர் ஒன்றியத்தில் அதிமுக -4, திமுக -6 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தை திமுக கைப்பற்றுவது சுலபமாக அமைந்தது. ஆனால் திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமார் என்பவர் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டதால், இரு கட்சிகளும் சமபலம் பெற்றது. இதனையடுத்து இன்றைய மறைமுகத்தேர்தலில் பங்கேற்க அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 14உறுப்பினர்களை கொண்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் திமுக - அதிமுக சமபலம் பெற்றிருந்தது. இன்றைய மறைமுகத் தேர்தலில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்கள் வராததால் கடமலை - மயிலை ஒன்றியத்திலும் மறைமுகத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மறைமுகத் தேர்தல் நடைபெற்ற 5ஒன்றியங்களில் அதிமுக -3, பாஜக -1 மற்றும் திமுக -1இடங்களில் வென்றுள்ளது. இவற்றில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிபட்டியில் லோகிராஜன், போடியில் சுதா மற்றும் உத்தமபாளையத்தில் ஜான்சிராணி ஆகியோர்கள் ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.
கம்பம் ஒன்றியத்தில் 1இடத்தில் வென்ற பாஜகவை சேர்ந்த பழனிமணி என்பவர் 2உறுப்பினர்களை கொண்ட அதிமுக ஆதரவுடன் தலைவர் பதவியை போட்டியின்றி கைப்பற்றினார். திமுக உறுப்பினர் ரேணுகா தேர்தலில் போட்டியிடவில்லை. தேனி ஒன்றியத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சக்கரவர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.







Conclusion: தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.