ETV Bharat / state

அண்ணா பல்கலை. விவகாரம்: தடையை மீறி போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர்!

author img

By

Published : Oct 16, 2020, 6:29 PM IST

தேனி: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலையிடம் காவல் துறையினரின் தடையை மீறி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்து போரட்டம் நடத்தினர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: தடையை மீறி தேனியில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர்!
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: தடையை மீறி தேனியில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் எமினென்ஸ் என்ற உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் துணைவேந்தரின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று (அக். 16) நடைபெற்றது.

பெரியகுளம் வடகரையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை நோக்கி வந்த மாணவர் சங்கத்தினரை, காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தபோதிலும் காவல் துறையினரின் தடையை மீறி சிலை பீடத்தில் ஏறி நின்று அண்ணாவின் மீது மனுவை வைத்து கோசங்களை எழுப்பி மாணவர்கள் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: தடையை மீறி தேனியில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர்!

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தலையீட்டை தடுக்க வேண்டும், பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும், துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்திட வேண்டும் உள்ளிட்டவைகளை மனுவாக எழுதி அண்ணா சிலை மீது வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் பெரியகுளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.