ETV Bharat / state

5வது நாள்.. 3 கும்கி யானை.. 2 ஷிப்ட்.. வனத்துறையின் பலே திட்டம்!

author img

By

Published : May 31, 2023, 3:39 PM IST

Updated : May 31, 2023, 4:17 PM IST

கம்பத்தில் புகுந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் இரண்டு ஷிப்டுகளாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

தேனி: கம்பத்தில் கடந்த 27ஆம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென உலா வந்த அரிக்கொம்பன் யானை அங்கிருந்த பொது மக்களை விரட்டி அச்சுறுத்தியது. இந்நிலையில் பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு காவல்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யானையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், பொதுமக்களால் யானைக்கு எந்தவித கோபத்தை ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு கம்பம் நகர்ப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தநாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார்க்குச் சொந்தமான வாழை தோப்பில் யானை தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.

இதனால் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல விவசாயிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். பின் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற யானை தொடர்ந்து இரண்டாவது நாளாக அந்தப் பகுதியிலே சுற்றி திரிந்து வருகிறது.

இதையும் படிங்க: எனக்கு கவலையே இல்லை... போதையில் கழிவுநீரில் படுத்து மதுப்பிரியர் அட்டகாசம்!

மேலும் யானையின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் யானையைப் பிடிப்பதற்காக முத்து, சுயம்பு, உதயன் என்கிற மூன்று கும்கி யானைகளைக் கம்பம் பகுதியில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து 160 வனத்துறை அதிகாரிகளும், கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 31 வனத்துறை அதிகாரிகளும் அரிக்கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுடன் பயிற்சி பெற்ற பழங்குடியினர் ஆகியோர் அரிகொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினருக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சுற்றித் திரியும் யானையை வனத்துறையினர் தங்களது பணியில் இரண்டு ஷிப்டுகளாக கண்காணித்து வருகின்றனர். யானையின் போக்கில் விட்டு ரேடியோ காலர் கருவி மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனால் விரைவில் அரிக்கொம்பன் யானை பிடிபடும் என பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

இதையும் படிங்க: அரி கொம்பன் தாக்கி ஒருவர் படுகாயம் - வனத்துறை சார்பில் நிதியுதவி!

Last Updated :May 31, 2023, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.