ETV Bharat / state

அரசுப்பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதல்: இருவர் பலி

author img

By

Published : Jun 13, 2020, 8:53 AM IST

தேனி: சின்னமனூர் அருகே இருசக்கர வாகனம் - அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

Bus  Two-wheeler  with face-to-face collision two person's death
Bus Two-wheeler with face-to-face collision two person's death

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் (38), திருப்பதி (45). கொத்தனார் வேலை செய்துவரும் இருவரும், நேற்று சின்னமனூரில் கட்டடப்பணி முடித்துவிட்டு வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளனர்.

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தைக் கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது எதிர்த்திசையில் வந்த மற்றொரு அரசுப்பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கோபால், திருப்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த சின்னமனூர் காவல் துறையினர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.