ETV Bharat / state

ஆண்டிபட்டியில் பட்டப்பகலில் 50 சவரன் நகை திருட்டு!

author img

By

Published : Sep 7, 2019, 9:00 AM IST

தேனி: ஆண்டிபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்துவருபவர் மாரிக்கனி. இவர் ஆண்டிபட்டி காவல் நிலையம் எதிரில் ஐஸ்கிரீம் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல் நேற்று காலை தனது கடையை நடத்துவதற்காக மாரிக்கனி சென்றுள்ளார். பின்னர் அவருக்கு உணவு கொடுப்பதற்கு அவரது மனைவி நாகதேவி வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து, கடையிலிருந்து மதியம் வீட்டிற்குத் திரும்பிய நாகதேவி அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆண்டிபட்டியில் பட்டப்பகலில் 50 சவரன் நகை திருட்டு

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீட்டின் பீரோவிலிருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக தேனியிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் அங்கிருந்து சென்று அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஓடி நின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பகலில் நிகழ்ந்த இத்திருட்டுச் சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro: ஆண்டிபட்டியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை. பொதுமக்கள் அச்சம்.Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மாரிக்கனி. இவர் ஆண்டிபட்டி காவல் நிலையம் எதிரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தனது கடையை திறப்பதற்கு மாரிக்கனி சென்று விடவே, பின்னர் அவருக்கு உணவு கொடுப்பதற்கு அவரது மனைவி நாகதேவி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். கடையிலிருந்து மதியம் வீட்டிற்கு திரும்பிய நாகதேவி அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வீட்டின் பீரோவில் இருந்த 50பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக தேனியிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் அங்கிருந்து சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஓடி நின்றது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.


Conclusion: பகலில் நிகழ்ந்த இக்கொள்ளைச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.