உதகமண்டல நகராட்சி சந்தையில் வாடகை செலுத்தாத 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இதில் தவணை முறையில் வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கும் நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து தினசரி சந்தையில் கடைகள் முன்பு, அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
மேலும், சீல் வைக்கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்; இல்லையெனில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் அன்பு!