ETV Bharat / state

கொடநாடு வழக்கில் 10 பேர் மீது 13 குற்றச்சாட்டுகள் பதிவு!

author img

By

Published : Aug 31, 2019, 9:04 AM IST

நீலகிரி: கொடநாடு கொலை வழக்கில் சயான் உள்ளிட்ட பத்து பேர் மீது 13 குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பதிவு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவிற்கு சொந்தமான பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றன.

இது தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்ததால், அந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே கொடநாடு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சயான் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை மாவட்ட நீதிபதி வடமலை கடந்த 27ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உள்பட 10 பேர் நேரில் ஆஜராகினர். அதில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டல், காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு, பங்களாவில் இருந்த கைக் கடிகாரங்கள், 42 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் காண்டாமிருக பொம்மை உள்ளிட்டவற்ற கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு என மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நீதிமன்றத்தில் காவல்துறையினர் பதிவு செய்தனர். இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொடநாடு வழக்கில் 10 பேர் மீது 13 குற்றச்சாட்டுகள் பதிவு!
Intro:OotyBody:
உதகை 30-08-19
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் பணம் இருப்பதாக கருதி சயான் உள்ளிட்டோர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது…
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்பட 11 பேர் மீது கோத்தகிரி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி சயான் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி வடமலை கடந்த 27-ந்தேதி தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உள்பட 10 பேர் நேரில் ஆஜரானதால் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது. கொடநாடு பங்களாவில் 200 கோடி பணம் இருப்பதாக கருதி கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, உதயக்குமார், மனோஜ்சமி, ஜித்தின்ஜாய், சந்தோஷ்சாமி, ஜம்சீர்அலி, சதீசன் ஆகியோர் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாகவும், கொள்ளை அடிக்க சென்ற போது ஓம்பகதூர் கொலை செய்யபட்டதாகவும் முக்கிய குற்றசாட்டாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. மேலும் 200 கோடி பணம் இல்லாததால் பங்களாவில் இருந்த 10 கை கடிகாரங்கள் மற்றும் 42 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் காண்டாமிருக பொம்மையை எடுத்து சென்று உள்பட மொத்தம் 13 குற்றசாட்டுகள் பதிவு செய்யபட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது.
பேட்டி: நந்தகுமார் - அரசு தரப்பு வழக்கறிஞர்.
ஆனந்தன் - சயான் தரப்பு வழக்கறிஞர்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.