ETV Bharat / state

நீலகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது!

author img

By

Published : Feb 10, 2021, 3:56 PM IST

நீலகிரி: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது!
நீலகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது!

நீலகிரி மாவட்டத்தில் பண்ணை பணியாளர்கள், செவிலியர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, அரசு காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று (பிப். 10) குன்னூர் - கோத்தகிரி சாலையில் சிம்ஸ் பூங்கா அருகே பண்ணை பணியாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோத்தகிரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க...முகமது அலியை வென்ற குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.