ETV Bharat / state

கொட்டித் தீர்க்கும் கனமழை: நீலகிரியில் 5 பேர் சாவு!

author img

By

Published : Aug 9, 2019, 12:59 PM IST

நீலகிரி: ஆறு நாட்களாக பெய்துவரும் கனமழையினால் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ooty

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக பெய்துவரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீரானது சாலைகளில் ஆறுபோல காட்சியளிப்பதுடன் பல குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்றதால், மக்கள் எங்கு செல்வது என்று செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

மேலும், பாலாடா, முத்தோரை, காக்காதோப்பு, இத்தலார், பேலிதளா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நீலகிரியில் கனமழை

இதேபோல் உதகையில் கனமழையினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், பாதுகாப்புக் கருதி குந்தா, கிளன்மார்கன் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையினால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Intro:OotyBody:உதகை                        09-08-19
நீலகிரியில் கொட்டி வரும் கனமழை. கனமழைக்கு 5 பேர் பலி.


         நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை இடைவிடாமல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரானது சாலைகளில் ஆறுபோல காட்சியளிப்பதுடன் பல குடியிறுப்பு பகுதிகளுக்குள் சென்றுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வது என செய்வதிறியாமல் உள்ளது. கொட்டி வரும் மழையினால் பாலாடா, முத்தோரை, காக்காதோப்பு, இத்தலார், பேலிதளா உள்ளிட்ட பகுதிகளில் 1000ற்கும் மேற்பட்ட ஏக்கரில்  பயிரிட்டிருந்த மலைகாய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைகிழங்கு ஆகியவை நீரில் மூழ்கின. மலைகாய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீர் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பிடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. இதே போல கனமழை பெய்து வரும் நிலையில் உதகையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாதுகாப்பு கருதி குந்தா மற்றும் கிளன்மார்கன் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழைக்கு இதுவரை 5பேர் உயிரிழந்துள்ளனர்.
பேட்டி : 1போஜன் - விவசாயி
2. கிருஷ்ணன்- பாலாடா விவசாயிConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.