ETV Bharat / state

நீலகிரியில் தீவிரமாகும் கனமழை; சீரமைப்பு பணிகள் தீவிரம்!

author img

By

Published : Aug 10, 2019, 10:47 PM IST

நீலகிரி: தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

RESCUE HELICOPTER

நீலகிரி மாவட்டம் உதகை, அவலாஞ்சி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும், மாலை இரவு நேரங்களில் இடைவிடாமல் மழை பெய்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்த மழையில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் மரங்களும் விழுந்துள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மலை காய்கறி பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.

நீலகிரியில் தீவிரமாகும் கனமழை..! சீரமைப்பு பணிகள் தீவிரம்...

மக்களைக் காப்பாற்றவும், சாலைகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அவலாஞ்சி பகுதியில் 40 குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. அவர்களை சிறிய ரக வானூர்தி உதவியுடன் மெல்ல மெல்ல மீட்டு வருகின்றனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து, 65 ராணுவ வீரர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர் என பலரும் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாறு காணாத அளவிற்கு அவலாஞ்சி பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 450 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மழை தீவிரமாகும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 10-08-19
நீலகிரியில் தீவிரமாக பெய்து வரும் கனமழை. சீரமைக்கும் பணிகள் தீவிரம்.
நீலகிரி மாவட்டம் உதகை, அவலாஞ்சி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் மாலை இரவு நேரங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கொட்டி வரும் மழையில் சிக்கி இதுவரை 6பேர் உயிரிழ்ந்துள்ளனர். அபாயகரமான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாமில் தங்கவைக்கபட்டுள்ளனர். இம்முகாமில் 2000ற்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கபட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் 100ற்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் மரங்களும் விழுந்துள்ளன. சுமார் 1500ற்கும் மேற்பட்ட ஏக்கரில் மலை காய்கறி பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மக்களை காப்பாற்றவும், சாலைகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற் எடுத்து வருகிறது. இந்நிலையில் அவலாஞ்சி பகுதியில் 40குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது. இதனால் அவர்களை காப்பாற்றும் வகையில் நேற்று உடல்நலகுறைவாக இருந்த 4பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர். இன்றும் ஹெலிகாப்டன் உதவியுடன் 7பேர் மீட்கப்பட்டு கோவை அழைத்து சென்றனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்திலிருந்து 65 இராணுவ வீரர்கள் வரவைக்கபட்டுள்ளனர். இராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர் என 1000ற்கும் மேற்பட்டவர்கள் சாலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 52 ஜே.சி.பி வானகங்கள் உதவியுடன் நீலகிரி மாவட்டத்தில் சிதைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
வரலாறு காணாத அளவிற்கு அவலாஞ்சி பகுதியில் படந்த நான்கு நாட்களில் மட்டும் 450செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை அளவே தமிழகத்தில் பெய்த மழையில் அதிகமாகும். மேலும் மழை தீவிரமாகும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் உதகை, குந்தா, அலவாஞ்சி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் மழை தீவிமடைந்தால் பல சேதங்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

பேட்டி :1.சுரேஷ் - உதகை கோட்டாச்சியர்
2. ராஜன் பாலா - பேரிடர் மீட்பு குழு கமென்டார்.

P2C உள்ளது.

         


Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.