ETV Bharat / state

ஹர்தாஸ் பாலியல் வன்புணர்வு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 5, 2020, 9:23 PM IST

நீலகிரி: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

hardas-sexual-assault-case-congress-party-protests
hardas-sexual-assault-case-congress-party-protests

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் வழியிலேயே இடைமறித்து, தாக்கி கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில முதலமைச்சர் தூண்டுதலின் பெயரில் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடு ஜனநாயக விரோதம், அப்பட்டமான மனித உரிமை மீறல் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டும் எனவும் காவல்துறையின் போக்கை கண்டித்தும் சத்தியாகிரக முறையில் அறவழிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது.

அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா, இதர கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹர்தாஸ் பாலியல் வன்புணர்வு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுதா, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்தனார்தான் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கு மோடி அரசுதான் முக்கிய காரணம் என்றும், இதனால் உபியில் யோகி அரசை உடனடியாக குடியரசு தலைவர் டிஸ்மிஸ் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:வயதான தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை: ரவுடி உள்பட 5 பேரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.