ETV Bharat / state

court staff members: நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா

author img

By

Published : Jan 21, 2022, 1:42 PM IST

court staff members: உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் இரண்டு நீதிபதிகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.

நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா
நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா

court staff members: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் 250-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 19) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இரண்டு நீதிபதிகள் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல் குன்னூர், கோத்தகிரியில் உள்ள சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது.

அதனையடுத்து 10 நீதிமன்றங்கள் இன்று காலை (ஜனவரி 21) முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன. இதனையடுத்து இன்று காலை பணிக்கு வந்த அனைத்து ஊழியர்களும் திரும்பிச் சென்றனர்.

இதனிடையே கூடலூர், பந்தலூர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அங்குள்ள நீதிமன்றங்களும் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆஸ்கார் விருது பட்டியலுக்குத் தகுதிபெற்ற ஜெய்பீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.